Header Ads



சு.க. யின் ஆதரவைப் பெற கோட்டாபய திட்டம் - தம்முடன் இணைந்து மெகா கூட்டணிக்கு விமல் கம்மன்பிலவுக்கு சிறிசேன அழைப்பு


அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய தலைமையின் கீழ், இனியொருபோதும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என, விமல் வீரவன்ச உறுதியாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், நாளையதினம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

2

அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்விரு கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.  

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அண்மையில் கூடிய கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்திலேயே இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்னும் சில கட்சிகளை இணைந்துகொண்டு முழுமையான கூட்டமைப்பை உருவாக்குவதற்​கே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் திட்டம் வகுத்துள்ளது.

அதனடிப்படையில் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதக கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கும் கலந்துரையாடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

No comments

Powered by Blogger.