Header Ads



டொலர் இல்லை - ஈராக், நோர்வே, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரங்களை மூடத் திட்டமா..?


வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் 2 தூதரங்களையும், ஒரு துணைத் தூதரகத்தையும் மூடுவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களை நடத்தி செல்வதற்கான செலவீனத்தை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் பாக்தாத் மற்றும் நோர்வேயின் ஒஸ்லோ நகரங்களில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்கள் இரண்டை மூடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவுஸ்திரேலியாவில் உள்ள துணைத்தூதரகம் என்பனவற்றை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மூடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது, வெளிவிவகார அமைச்சரினால் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.