Header Ads



இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நீதியமைச்சர் அலி சப்ரி, ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் சந்திப்பு


(அஷ்ரப்  ஏ சமத்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாவின் 25வது மாநாட்டுக்கு அழைப்பிதழை ஏற்று கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் நாடு மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி அவா்கள் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியை அவரது இல்லத்தில் (13.03.2022 )சந்தித்தாா். இச் சந்திப்பின்போது  முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவா் எம்.எம்.அமீன்  மற்றும் இந்திய ஊடகவியலாளா் சாஹூல் ஹமீதும் கலந்து கொண்டாா்கள்.

2

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு, இராமநாதபுரம் தொகுதி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி அவர்களுக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (12) தமது இல்லத்தில் இராப் போசன விருந்தளித்து கௌரவித்தார். அதில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முன்னாள் தலைவர் என்.எம் அமீன், தமிழக "மணிச்சுடர்" ஊடகவியலாளர் சாஹுல் ஹமீத், ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அயல் நாடுகளான இந்தியா, இலங்கை ஆகியவற்றின் சமகால அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தியதாக பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.




No comments

Powered by Blogger.