Header Ads



மக்களின் வேதனைகளைப் பயன்படுத்தி தனது ஜனாதிபதி கனவை சஜித் பிரேமதாஸ நிறைவேற்றப் பார்க்கிறார்


நாட்டு மக்களின் வேதனைகளைப் பயன்படுத்தி தனது ஜனாதிபதி கனவை சஜித் பிரேமதாஸ நிறைவேற்றிக்கொள்ளப் பார்ப்பதாக தெரிவிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, குழம்பியக் குட்டையில் சஜித் மீன்பிடிக்கப் பார்க்கிறார் எனவும் தெரிவித்தார். 

களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டை நிர்வகிப்பதற்கான அரசாங்கமொன்றை உருவாக்கி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாட்டு மக்களின் வேதனைகளைப் பயன்படுத்தி தனது ஜனாதிபதி கனவை நனவாக்கப் பார்க்கிறார் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் நிலைமைகள் மோசமடைந்தாலும் சஜித் பிரேமதாஸவும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.