Header Ads



தேசப்பற்று குறித்த பொய்யான கதைகள் மூலம் அரசாங்கம் நாட்டை அழிக்கின்றது - ராஜித


தேசப்பற்று குறித்த பொய்யான போலியான கதைகள் மூலம் அரசாங்கம் நாட்டை அழிக்கின்றது என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்திடம் அரசாங்கம் உதவியை பெற்றால் தான் பதவி விலகுவேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்,அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியுள்ளது வாசுதேவ நாணயக்கார இன்னமும் பதவி வகிக்கின்றார் என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தற்போதைய நெருக்கடிகளிற்கு நல்லாட்சி அரசாங்கத்தை குறைகூறு முயல்கின்றார் ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் உணவும் ஏனைய பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டன என அவர் குறிப்பி;ட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் டொலருக்கும் அத்தியாவசிய பொருட்களிற்கும் பற்றாக்குறை காணப்படவில்லை,பணவீக்கமும் பொருட்களின்விலைகளும் குறைவாகவே காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சரின் இந்திய விஜயம் குறுகியகால தீர்வே என குறிப்பிட்டுள்ள ராஜித சேனாரட்ண கடனை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்யலாம் ஆனால் அதன் பின்னர் அரசாங்கத்தின் பொருளாதார திட்டம் என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பலநாடுகளில் இருந்து கடன்களை பெறுவதன் மூலம் அரசாங்கம் தற்காலிக தீர்வுகளை முன்வைக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.