Header Ads



அதிக பணம் வழங்கப்பட்டும், அமைச்சுக்களில் சரியாக செயற்படவில்லை - எனவே கம்மன்பில, விமலை பதவி நீக்கினோம்


விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களில் அவர்கள் சரியாகச் செயற்படாமல் வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமையே என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏனைய அமைச்சுக்களை விட அந்த அமைச்சுக்களுக்கு அதிக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும், பல சந்தர்ப்பங்களில், அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறி அவர்கள் செயற்பட்டுள்ளனர், புத்திசாலிகள் காபட் வீதிகளை ஓட்டுபவர்கள் அல்ல, குண்டும் குழியுமான வீதிகளை ஓட்டுபவர்கள் என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. I don't understand what he says, does anyone of you understand any thing.

    ReplyDelete

Powered by Blogger.