Header Ads



விமல், கம்மன்பிலவுக்கு நீதி கிடைக்கும்வரை, அமைச்சு பதவிக்குரிய செயற்பாடுகளிலிருந்து விலகி இருப்பேன்


தமது குழு எதிர்க்கட்சியுடன் ஒருபோதும் இணையப் போவதில்லையென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று முன்தினம் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை தாம் தமது அமைச்சு பதவிக்குரிய செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தாம் தொடர்ந்தும் 11 கட்சிகளில் கூட்டணியுடன் இணைந்து செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.