Header Ads



என்னை ஆத்­தி­ர­மூட்­டா­தீர்கள், சூபி முஸ்­லிம்­களை நான் கெள­ர­வப்­ப­டுத்­து­கிறேன் - ஜெய்­லானி பள்­ளி­வாசல் மினாரா அகற்றப்பட்டது பிரச்சினையல்ல,


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வாசல் மினாரா கட்­ட­மைப்பு அமைந்­துள்ள பாதை அவ­சி­ய­மற்­ற­தாகும். அதனால் மினாரா அகற்­றப்­பட்­டதில் எந்த பிரச்­சி­னை­களும் இல்லை என தெரி­வித்­துள்ள கூர­கல புனித பூமிக்குப் பொறுப்­பான வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர், விவ­காரம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கிறேன். என்னை ஆத்­தி­ர­மூட்­டா­தீர்கள். இவ்­வி­வ­கா­ரத்தை அடிப்­ப­டை­வா­தத்­துக்கு இட்­டுச்­செல்­லா­தீர்கள். சூபி முஸ்­லிம்­களை நான் கெள­ர­வப்­ப­டுத்­து­கிறேன். என்­னுடன் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு வாருங்கள்’ என்றும் தெரி­வித்­துள்ளார்.

கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் மினாரா கட்­ட­மைப்பு அண்­மையில் இன­வா­தி­களால் அகற்­றப்­பட்­டமை தொடர்பில் வின­வி­ய­போதே கூர­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; கூர­கல புனித பூமி அபி­வி­ருத்­தித்­திட்டம் தற்­போது துரி­த­க­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

புனித பூமியில் அமைந்­தி­ருக்கும் பள்­ளி­வாசல் ஸியாரம் மற்றும் கொடி­கம்பம் என்­பன அகற்­றப்­ப­ட­மாட்­டாது. இவை அபி­வி­ருத்தி செய்­யப்­படும். ஸ்ரீபாத போன்று இப்­ப­குதி அபி­வி­ருத்­திக்கு உட்­ப­டுத்­தப்­படும்.

ஜெய்­லானி பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு பெற்றுக் கொடுப்­ப­தற்­காக அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை மற்றும் வக்பு சபை என்­ப­ன­வற்­றுக்கு கடி­தங்­களை அனுப்பி வைத்தேன். ஆனால் வக்பு சபையோ, அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையோ என்­னுடன் பேச­வில்லை. கடி­தங்­க­ளுக்குப் பதில் கிடைக்­க­வில்லை. நானே கொழும்­புக்கு வந்து உலமா சபையைச் சந்­தித்தேன். ஆனால் எவ்­வித பலனும் ஏற்­ப­ட­வில்லை. அன்று பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொண்­டி­ருக்க முடியும். இன்று பூதா­க­ர­மா­கி­விட்­டது.

இவ்­வி­வ­கா­ரத்தில் சுமு­க­மான தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக முயற்­சித்­தாலும் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து ஒத்­து­ழைப்பு கிடைக்­க­வில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் சபை ஒன்று கூடி பேசி­யி­ருக்­கி­றார்கள். ஆனால் என்­னுடன் பேச­வில்லை. என்­னுடன் பேசுங்கள் என்றே கூறு­கிறேன்.

இவ்­வி­வ­கா­ரத்தை சர்­வ­தேச மட்­டத்­துக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று வேண்­டிக்­கொள்­கிறேன். அதி­கா­ரத்தைக் கைப்­பற்றிக் கொள்­வ­தற்கு இவ்­வி­வ­கா­ரத்தை அர­சி­ய­லாக்க வேண்டாம்.

தற்­போது கூர­க­லயின் பழைய பாதை பள்­ளி­வா­ச­லுக்குச் செல்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. புதிய வீதிக்­கட்­ட­மைப்பு நிறு­வப்­பட்­டுள்­ளது. எனவே மினாரா கட்­ட­மைப்பு அமைந்­துள்ள பாதை அவ­சி­ய­மற்­ற­தாகும். அதனால் மினாரா அகற்­றப்­பட்­டதில் எந்த பிரச்­சி­னை­களும் இல்லை.

கூர­கல அபி­வி­ருத்­தித்­திட்­டங்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் என்­னுடன் கலந்து பேச முன்­வ­ர­வேண்டும். கூர­கல பகுதி தொல்­பொருள் வல­ய­மாகும். இங்­குள்ள பிரச்­சி­னை­களை கலந்து பேசித் தீர்த்­துக்­கொள்­ளலாம். சூபி முஸ்­லிம்கள் இப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு பெற்­றுக்­கொள்ள முன்­வர வேண்டும். அல்­லாது சமூக ஊட­கங்கள் மற்றும் ஊட­கங்கள் மூலம் அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்­பு­வ­தனால் நன்மை கிடைக்­கப்­போ­வ­தில்லை.

அத்­தோடு நாம் ஏதும் தவறு செய்­தி­ருந்தால் ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ப­டுத்­துங்கள். கூர­கல பகுதி பெளத்­தர்­களின் தொல்­பொருள் வல­ய­மாகும். நான் ஏதும் குற்­றங்கள் செய்­தி­ருந்தால் பொலிஸில் முறை­பாடு செய்­யுங்கள் என்றார்.

Vidivelli

1 comment:

Powered by Blogger.