சிலிண்டர் ஒன்றைப் பெற, 7 நாட்களாக வரிசையில் நிற்கும் மாணவன்
- எஸ்.யோகா -
கம்பளை அம்பேகமுவ வீதியில் உள்ள சிலிண்டர் விற்பனை நிலையத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாணவர் ஒருவர், கடந்த ஏழு நாட்களாக வந்து செல்கிறார்.
பாடசாலை சீருடையில் நேற்றைய (21) தினமும் சிலிண்டரைப் பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்த மாணவன், சிலிண்டர் கிடைக்காமல் வெறுங்கையுடன் நேற்றும் வீடு திரும்பியுள்ளார்.
சிலிண்டரை பெற்றுக்கொள்ள, அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தமையால் அவரால்(21) பாடசாலைக்குக்கூட செல்ல முடியவில்லையென மாணவன் தெரிவித்துள்ளார்.
தனது தாய்க்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டரைப் பெற்றுக்கொள்வது சிரமம் என்பதாலேயே, சிலிண்டரை பெற்றுக்கொள்ள தினமும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை தனக்கு ஏற்படுவதாகவும் அந்த மாணவன் மேலும் தெரிவித்தார்.
Post a Comment