Header Ads



நாளை புதன்கிழமை நாடளாவிய ரீதியில் 7 1/2 மணித்தியாலங்கள் மின்வெட்டு


நாளை (மார்ச் 2) நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. 

மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி, அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. 

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.