Header Ads



வீடொன்றில் தீ - ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணம்


கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புரவத்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தீ விபத்துக்குள்ளான வீட்டில் இருந்த தாய் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று (24) காலை ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.