2 நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாமென பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை
இன்று (30) மற்றும் நாளை (31) எரிபொருள் நிலையங்களில் டீசலுக்காக வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது.
37,500 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கிவந்த கப்பலிலிருந்து திட்டமிட்டவாறு நேற்றைய தினம் எரிபொருளை தரையிறக்க முடியாது போயுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படும் என்றும், வழமைபோல பெற்றோல் விநியோகம் இடம்பெறும் என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment