ஆளும் கூட்டணியின் 2 முக்கிய கலந்துரையாடல்கள் இன்று
ஆளும் கூட்டணியின் 2 முக்கிய கலந்துரையாடல்கள் இன்று (22) இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையில் இன்று மாலை 6 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு முன்னர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் முற்பகல் 11.30 அளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment