தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 2 சிறுவர்கள் வபாத்
-ஐ.எல்.எம் நாஸிம், நூருள் ஹுதா உமர்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் இடத்திலுள்ள தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு பதின்மூன்று வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தென்னத்தோப்பிற்கு வழமை போன்று விறகு சேகரிக்க சென்ற போது றியாஸ் முஹம்மட் ஆசீக்,முஹம்மட் இப்றாஹிம் என்ற
இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Innalillahi wa inna ilaihi rajioon Allahumaghfirlahu warhamhu
ReplyDeleteremove the picture!! No Publishing Ethics?
ReplyDelete