மேலும் 250 மில்லியன் டொலர் கடன் கோரியுள்ள இலங்கை - இன்னமும் முடிவெடுக்கவில்லை என்கிறது பங்களாதேஸ்
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை பங்களாதேசிடமிருந்து மேலும் 250 மில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளது.
இது குறித்து பங்களாதேஸ் ஆராய்ந்து வருகின்றது ஆனால் இன்னமும் முடிவெடுக்கவில்லை என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஏகே அப்துல் மொமீன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீண்டுமொரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்,அது இன்னொரு கடனாக காணப்படும் ஆனால் நாங்கள் இன்னமும் அது குறித்து முடிவெடு;க்கவில்லை என பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிச்சயமற்ற நிலையை சுட்டிக்காட்டியுள்ள அவர் உக்ரைனில் காணப்படும் தற்போதைய நிலைமையின் பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது பங்களாதேஸ் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளையே நம்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முதல்தடவை நாணய நெருக்கடியை எதிர்கொண்டவேளை 250 மில்லியன் டொலர் நாணய பரிமாற்ற செயற்பாட்டிற்கு இணங்கினோம்,இலங்கை இன்னமும் நெருக்கடிகளை எதிர்கொள்வதால் அவர்கள் கடனை செலுத்தவேண்டிய காலத்தை நீடித்துள்ளோம் என பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment