Header Ads



நாட்டில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 185,000 ஆக உயர்ந்தது


நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள்  வேகமாக  அதிகரித்துச் செல்கின்றது.  வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. 

அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 185,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை சுமார் 170,000 ரூபாவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, சந்தையில் தங்கத்துக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.