சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கடன் கோரிய இலங்கை
சீனாவிடம் இலங்கை கோரிய, கடன் உதவி தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.
1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் இலங்கை அதிகாரிகள் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கோரிக்கைகள் தொடர்பில் சீனா பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
Post a Comment