Header Ads



என் முகத்தை மூடிக் கொள்கிறேன், மக்கள் தாக்குவார்களோ எனவும் அச்சமாக உள்ளது - 12 வருட அரசியலில் விரக்திதான் மிச்சம்


எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத் தாக்குவார்கள் என அஞ்சுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று எரிபொருள் பிரச்சினை முழு இலங்கையையும் பாதித்துள்ளது. நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போது என் முகத்தை மூடிக் கொள்கிறேன். நான் ஓட்டுனரை விரைவாக செல்லச் சொல்கிறேன். அப்படியொரு நிலை உருவாகியுள்ளது.

இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கசப்புடன் உள்ளனர். நானும் 12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், விரக்திதான் மிச்சம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.