Header Ads



இஸ்லாத்திடம் தோல்வியை தழுவிய RSS


- சங்கை ரிதுவான் -

இந்தியாவிலுள்ள 30 கோடி முஸ்லிம்கள், பாகிஸ்தானிலுள்ள 20 கோடி முஸ்லிம்கள், பங்களாதேஷிலுள்ள 20 கோடி முஸ்லிம்கள் என 70 கோடி முஸ்லிம்களும் இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களாக வாழ்ந்தவர்கள்.

இந்த 70 கோடி முஸ்லிம்களும் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரபிகள் அல்ல!

சாட்ஷாத் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். இந்திய மண்ணுக்கே சொந்தக்காரர்கள்.

பலதெய்வ வழிபாட்டை கொண்டவர்கள்.

சாதிய கொடுமை, ஒடுக்குமுறை, தீண்டாமை போன்ற காரணங்களாலும் இஸ்லாத்தின் சமத்துவ கொள்கை ஈர்த்த காரணத்தாலும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த மூன்று நாட்டில் மட்டும் 70 கோடி முஸ்லிம்கள் தற்போது வாழ்கிறார்கள்.

மூன்று நாடுகளும் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் மக்கள் தொகையில் சம அளவில் இருந்திருப்பார்கள்.

இந்த அளவுக்கு இந்தியாவில் இஸ்லாம் வளர காரணம் யார் ?

இஸ்லாத்தை போதித்த நபிகள் நாயகம் வாழ்நாளில் ஒருமுறை கூட இந்தியாவிற்கு வந்ததுமில்லை. இஸ்லாமிய பிரச்சாரம் செய்ததுமில்லை.

நபிகள் நாயகத்திற்கு சிலையும் இல்லை.

ஆனால் இந்தியா முழுவதும் இஸ்லாமிய கொள்கை பரவியிருக்கிறது.


தினம் தினம் முஸ்லிம்களை கொன்று குவிக்கிறார்கள்.


பாபர் மஸ்ஜித், முத்தலாக், காஷ்மீர் 370, CAA, ஹிஜாப் என முஸ்லிம்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கிறார்கள்.

முஸ்லிம்கள் இந்து மதம் திரும்பினால் ரூ 5 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள்.

மாட்டிறைச்சியை உலகத்திற்கே ஏற்றுமதி செய்து இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நம்பர் 1 என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டால் படுகொலை செய்கிறார்கள்.

ஜெய்ஸ்ரீராம் சொல்லாவிட்டால் கொன்று குவிக்கிறார்கள். 

முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும், உயிருக்கு பயந்தோ, ஆசை வார்த்தைக்கு இணங்கியோ யாரும் செல்வதில்லை.

ஆனால் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால்....

இந்தியாவின் உள்ளே இஸ்லாம் நுழைந்து ஆயிரம் ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆயிரம் ஆண்டுகளை தாண்டினாலும் சுதந்திரம் கிடைக்கும்போது இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை வெறும் 3 கோடி

ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு 60 ஆண்டுகளில் 10 மடங்காக அதிகரித்து 30 கோடி முஸ்லிம்கள் தற்போது இந்தியாவில் வாழ்கிறார்கள்.

1925 ல் RSS தொடங்கப்படுவதற்கு முன்பு ஆயிரம் ஆண்டுகளில் 3 கோடியில் இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை RSS தொடங்கப்பட்ட பிறகு இஸ்லாத்தின் எண்ணிக்கை 30 கோடியாக தார்மாறாக உயர்ந்துள்ளது.

RSS உதயத்திற்கு பிறகே இஸ்லாம் இந்தியாவில் வேகமாக வளர்ந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ், ஸால் பல்வேறு சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சியில் அமர முடிந்தது. அதிகாரத்தை சுவைக்க முடிந்தது. ஆனால் இஸ்லாத்திடம் ஆர்.எஸ்.எஸ், ஸால் வெல்ல முடியவில்லை.

ஊடகங்கள் மூலம் RSS எவ்வளவு அவதூறுகளை இஸ்லாத்தின் மீது வீசினாலும் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். இஸ்லாத்தின் மீது வீசப்பட்ட அவதூறுகள் வேறொரு சித்தாந்தத்தின் மீது வீசப்பட்டிருந்தால் அந்த சித்தாந்தமே அழிந்திருக்கும்.

ஆனால் இஸ்லாம் வளரவே செய்திருக்கிறது.

3 கோடி முஸ்லிம்களை ஒழிப்பதற்காக புறப்பட்ட RSS 30 கோடி முஸ்லிம்கள் பெருகும் அளவுக்கு இஸ்லாத்திடம் வரலாற்று தோல்வியை தழுவி விட்டது.

RSS இன்னும் தோல்வியை சந்திக்கும்!

இஸ்லாம் இன்னும் கோடிக்கணக்கான இதயங்க்களை வெல்லும்


6 comments:

  1. Alhamdulillah
    Alhamdulillah
    Alhamdulillah

    ReplyDelete
  2. இன்னும் நாம இந்திய அரசு களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்று கூறும் இந்திய இனவெறி கூட்டத்தை ஆதரிக்க முடியுமா

    ReplyDelete

Powered by Blogger.