Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் மேலதிகமாக பிரதான சூத்திரதாரி இருந்தால் கூறுங்கள் - சரத் வீரசேகர


 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக நௌபர் மெளலவியையே கருதுவதாகவும், இவருக்கு மேலதிகமாக பிரதான சூத்திரதாரி தொடர்பில் எவருக்கேனும் தகவல் தெரியுமாக இருந்தால் அதுபற்றி தெரிவிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) புதன்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கமும், பொலிஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விசாரணை நடவடிக்கைகளில் அரசாங்கம் மந்தக் கதியில் செயற்படுகின்றது என்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் அநியாயமானது. 

இதனால் அந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கின்றோம். அத்துடன் இந்தத் தாக்குதல் தொடர்பாக குரலெழுப்பும் நபர்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுவும் உண்மைக்கு புறம்பானது என்று கூறினார்.


வீரகேசரி


No comments

Powered by Blogger.