Header Ads



ரஷ்ய - உக்ரைன் போரை விட, இலங்கையின் பொருளாதார நிலைமை பாரதூரமானது


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போரை விட இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார யுத்தம் பாரதூரமான ஒன்று என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் பற்றியோ, வேறு நெருக்கடிகள் தொடர்பாகவோ பேசி விளக்கங்களை கூறுவது பலனளிக்காத செயல். பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை அந்த நிலைமையில் இருந்து எப்படி மீட்பது என்ற விடயத்தையே நாம் சிந்திக்க வேண்டும்.

நாட்டுக்க்கு ஏற்பட்டுள்ள நிலைமையில், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து, அவர் சிறப்பாக செய்தார், இவர் சிறப்பாக செய்யவில்லை என்று கூறி வேடிக்கை பார்க்காது செயற்பட வேண்டும். நாட்டு மக்களை வாழ வைப்பது தொடர்பாக பிரதான கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். TW

No comments

Powered by Blogger.