Header Ads



இலங்கையர்களுக்கு கனடாவில் வேலைவாய்ப்பா..? போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் விழிப்புடன் செயற்படுங்கள்


மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் 2022” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அது போலியானதெனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த போலி வேலைவாய்ப்பு பிரச்சாரம் நடவடிக்கையில், ஆட்சேர்ப்பு மூலம் உடனடி பணி அனுமதிகளை வழங்கப்படுவதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றுவதாக தெரியவந்துள்ளதென கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சாரம் பொய்யானது என மீண்டும் வலியுறுத்திய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.