பரிப்புவா கைது
தேடப்பட்டுவந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான பரிப்புவா எனப்படும் வெல்லம்பிட்டி அமல், நேற்று (14) இரவு அம்பன்பொல பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதம நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டுவரும் குற்றாவாளியாவார்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் கைக்குண்டும் வைத்திருந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பரிப்புவாவுக்கு எதிராக கொலை, கப்பம் கோருதல் மற்றும் கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பல நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment