Header Ads



இராஜாங்க அமைச்சருக்கு நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்த மக்கள்


 நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவாவிற்கு மக்கள் இன்று (01) எதிர்ப்பு தெரிவித்தனர்

பேலியகொடை மெனிங் சந்தையூடாக புதிய பஸ் சேவையை ஆரம்பித்து வைக்க இன்று அவர் சென்றிருந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வெலிவேரிய , கடவத்தை , ஹெந்தலை , கம்பஹா , நிட்டம்புவ உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு வரும் சில பஸ்கள் மெனிங் சந்தையூடாக பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மெனிங் சந்தைக்கு செல்லும் நுகர்வோர் , வர்த்தகர்களின் நலன் கருதி இந்த பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

சில பஸ்களை இராஜாங்க அமைச்சர் கண்காணித்த போது மக்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.