Header Ads



வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில், புனித மிஃராஜ் தின நிகழ்வு


புனித மிஃராஜ் தின நிகழ்வு எதிர்வரும் (28) திங்கட்கிழமை இரவு வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹீம் அன்சார் தலைமையில், இடம்பெறும் மேற்படி நிகழ்வுக்கு நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, அலி சப்ரி பிரதம அதிதியாகவும் ஊவா மாகாண ஆளுனர் ஏ. ஜே. எம் முஸம்மில் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மர்ஜான் பளீல் ஹாஜியார், காதர் மஸ்தான் உட்பட மற்றும் பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட அதிதிகளாகவும், அரச உயர் அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.