Header Ads



சண்முகாவின் வெண்புறாக்களே, நீங்கள் எதற்காக பாதையில்...?


                                சண்முகாவின் இன்றைய ஹபாயா முரண்பாடு.

நாளை

இணக்கப்பாட்டுக்கு வரலாம்...

ஏன், மன்னிப்பும் மனிதாபிமானமும் கூட உறவுப் பாலமிடலாம்...

இரு தரப்பினரும் - நாளை

ஒரே புன்னகையால் ஒன்றுபடலாம்...

வெண்புறாக்களே!

நீங்கள் எதற்காக பாதையில்?

அன்று வகுப்பறை விட்டு வெளியேறினீர்கள்... 

கண்மணிகளே!

எங்களுக்கும் வலித்தது...

பாதைக்கும் வந்தீர்கள்... 

நம் உறவில் பாதி அழிந்தது...

அந்த உச்சிவெயில், 

"உங்களைச்" சுடவில்லை...

"எங்களைச்" சுட்டது...

சமூக இடைவெளி கூட உங்கள் கவனத்திலில்லை...

பதறிவிட்டோம்...

கோசமிட்டீர்கள்

பத்திரிகைகள்... 

செய்திகள்...  

வலைத்தளங்கள்... 

அதிர்ந்தன

பிஞ்சுகளே!

இன ஒற்றுமை பற்றிய

சொல்வதெழுதுதலில்...

அதிக புள்ளி 

உங்கள் பள்ளிக்கு...

பர்சானா றியாஸ்

1 comment:

  1. மாணவர்களின் பெற்றோர்கள் இந்த விடயத்தில் மாணவர்களை இனவாதத்தில் மாட்டிக்கொண்டு விடும் விடயத்தில் அசிரத்தை காட்டுவார்களாயின் தமிழ் சமூகத்தின் எதிர்காலம் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு கசப்பானதாகவே அமைந்துவிடும் ஆபத்துள்ளது. சேர்ந்து வாழவும் முடியாமல் பிரிந்து வாழவும் வக்கில்லாமல் தங்களுக்குள் அடித்துக்கொண்டு அழிந்துவிட்ட, படிப்பினைக்கு உதவும் சமூகமாக மாறக்கூடும்.

    ReplyDelete

Powered by Blogger.