Header Ads



பலகத்துறையில் வலம்புரி கவிதா வட்டத்தின், நோண்மதி கவியரங்கு (படங்கள்)


- எம். ஜே.எம். தாஜுதீன் -

பலகத்துறை  கலை இலக்கிய வட்டத்தின் அனுசரணையுடன் வலம்புரி கவிதா வட்டம் நடத்திய  அதன் 77 ஆவது  நோன்மதி கவியரங்கம் நேற்று (16.02.2022) பலகத்துறை அல் அம்ரா மண்டபத்தில் நடைபெற்றது.  

வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கலாபூஷணம் நஜ்முல் ஹுசைன் விழாவுக்கு தலைமை வகித்தார். 

மறைதாசன் யூ.எம்.தாஸின் நத்வி,  அல் அஸ்ஹரி அவர்கள் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவின் சிறப்பு அதிதியாக சிரேஷ்ட ஊடகவியலாளரும்  "கம்மல்துறை வரலாறும் வாழ்வியலும் " நூலாசிரியருமான  கலாபூஷணம் எம். ஜே. எம். தாஜூதீன் கலந்துகொண்டார்

பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் உறுப்பினர் கவிஞர் இக்பால் கவியரங்குக்கு தலைமை தாங்கினார்.  வகவத்தின் செயலாளர் இள நெஞநெஞ்சன் முர்ஷிதீன்  வரவேற்புரை நிகழ்த்தினார்.

முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம் கவிஞர்கள் மற்றும்  கவிதாயினிகள் இந்நிகழ்வில்  கவிதைகள் பாடினார்.

பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் ஸ்தாபக உறுப்பினர் கவிஞர் ரிஸ்மி  அறிமுக உரை நிகழ்த்த செயலாளர் சைலாஸ் நன்றி உரை வழங்கினார்.



No comments

Powered by Blogger.