Header Ads



இளைஞர்களை தவறாக வழிநடத்தும், விருந்துபசாரங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை


இளைஞர்களை தவறாக வழிநடத்தவும், விஷ போதைப்பொருள் பாவனைக்காகவும் இன்று (14) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான விருந்துபசாரங்களை சுற்றிவளைக்குமாறு சகல காவல்நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு காவல்துறை புலனாய்வு பிரிவினரின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காதலர் தினம் என்பதால் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதற்கு சிலர் முயல்கின்றனர். எனவே, குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம், தமது பிள்ளைகள் இன்றைய தினம் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இளைஞர்களும் இவ்வாறான வர்த்தகர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.