Header Ads



விலை அதிகரிப்பை வழங்கினால், அது வரலாற்றில் பதிவாகும்


இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் கோரியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை வழங்கினால், அது வரலாற்றில் பதிவாகும் விலை அதிகரிப்பாகும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில், விலை அதிகரிப்பை மேற்கொள்ளத் தயாரில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற 40,000 மெற்றிக் டன் டீசல், கொலன்னாவை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் களஞ்சியத்தின் தலைவர் நாலக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, டீசல் தட்டுப்பாடு நாளைய தினத்துடன், ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.