Header Ads



வெள்ளவத்தை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர், மாலைதீவு நாட்டவர் என அடையாளம்


வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கண்டெடுக்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒரு சடலம் தொடர்பில் மேலதிக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சடலம், காணாமல் போன மாலைதீவைச் சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளையில் வசித்து வந்த 24 வயதுடைய இளைஞன் வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந் நிலையில் வெள்ளவத்தை பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்களில் ஒன்று மாலைதீவு பிரஜையுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மற்றைய சடலத்தை இதுவரை பொலிஸார் அடையாளம் காணாத நிலையில், இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.    

No comments

Powered by Blogger.