Header Ads



மஹாஓய உதவிப் பிரதேச செயலாளராக, அய்மா நிஃமத்துல்லா நியமனம்


(பி.எம்.எம்.ஏ.காதர்)

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த அய்மா நிஃமத்துல்லா கடந்த ஆறு மாதங்கள் கொழும்பு, திருகோணமலை. அம்பாறை, கல்முனை ஆகிய இடங்களில் பயிற்சியை நிறைவு செய்தபின்னர். மஹாஓய பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2022-02-11ஆம் திகதி பிரதேச செயலாளர் திலின விக்கிரமரத்தன முன்னிலையில் தனது கடமையைப் பொறுப்பெற்றார்.தெரிவு செய்யப்ட்டவர்களுக்கான நியமனக்கடிதங்கள் கடந்த 2022-02-08ஆம் திகதி உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஸமல் ராஜபக்ஸவினால் வழங்கி வைக்கப்பட்டது. இவர் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தின் ஸ்தாப அதிபர் கவிஞர் ஏ.ஆர் நிஃமத்துல்லா (அறநிலா),ஆசிரியை ஏ.ஜி.உம்மு பத்தீலா தம்பதியின் மூத்த புதல்வியும்,சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அவர்களின் மனைவியுமாவார்  

No comments

Powered by Blogger.