அடம் பிடிக்கும் இராஜாங்க அமைச்சர்
மீண்டுமொருமுறை அமைச்சிற்கு செல்வதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஸா தெரிவித்துள்ளார்.
தமது தனிப்பட்ட பணிக்குழாமை அமைச்சிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்தமை குறித்து hiru வினவியபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த முறை வரவு செலவு திட்டத்தில் இராஜாங்க அமைச்சுக்கு ஒதுக்கிடப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா நிதியை, கிராமிய வீதிகளைப் புனரமைப்பதற்காக விடுவிப்பதை அதன் செயலாளரான பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஸா தமது தனிப்பட்ட பணிக்குழாமை அமைச்சிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
Post a Comment