நாளை என்ன செய்யப் போகிறார் நிமல் லன்சா..?
தனது அமைச்சு கடமைகளில் இருந்து விலகியிருக்கும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா பாராளுமன்றத்தில் நாளை (22) முக்கிய அறிவிப்பொன்றை விடுக்க உள்ளார்.
அமைச்சுசார் கடமைகளில் இருந்து விலகியிருப்பதற்கான காரணத்தையும், எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது நிமல் லன்சா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தனது இராஜாங்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான காரணங்களை குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கும் அவர் தயாராகிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment