Header Ads



சமுதிதவின் வீடு தாக்குதல், அவன்காட் நிறுவனத்துக்குத் தொடர்பு - சுனில் வட்டகல


ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்துடன் அவன்காட் நிறுவனத்துக்கு தொடர்பிருப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் நன்கு பயிற்றுவிக்கப் பட்டவர்கள் என்பது கமெரா காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது என அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

பத்தரமுல்ல பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளை வான் கலாசாரத்தை மீண்டும் நாட்டுக்கு அறிமுகப்படுத்தி ஜனநாயகம் இல்லாத நாடாக மாற்றும் முயற்சியே இந்தத் தாக்குதல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.