Header Ads



7 ஆம் தரத்தில் கற்கும் மாணவன் தற்கொலை - வீடியோ கேம்களுக்கு அமையான சிறுவனின் பெரியம்மா தெரிவிப்பு


அநுராதபுரத்தில் உள்ள பிரதான பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயது மாணவரொருவர் தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அனுஹாஸ் செனவிரத்ன என்ற குறித்த சிறுவன் தனது தாயின் ஆடை துணியின் மூலம் தூக்கிட்டு கொண்டுள்ளதாக தெரியவருகிறது. 

இவர் வீடியோ கேம்களுக்கு அதிகளவில் அடிமையாகி இருந்ததாகவும், அவர் விளையாடிய கேம் நாட்டில் தடை செய்யப்பட்ட கேம் எனவும் சிறுவனின் பெரியம்மா தெரிவித்துள்ளார்.

சிறுவனின் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்துவதற்காக தாயார் அவரிடமிருந்து தொலைபேசியை வாங்கியுள்ளதுடன், நேற்று காலை கல்வி தேவைக்காக மீண்டும் வழங்கியுள்ளார்.

அதன் பின்னரே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.

தான் அடிமையாகியிருந்த வீடியோ கேமில் காணப்படுவதை போன்றே சிறுவன் தூக்கில் தொங்கியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 


No comments

Powered by Blogger.