Header Ads



பாலியல் தேவைக்காக சிறுமிகளையும், பெண்களையும் விற்பனை செய்பவன் கைது - வங்கிக் கணக்கில் 4 கோடியே 56 இலட்சத்து பணம்


கொழும்பு - கல்கிஸை பகுதியில் சிறுமியொருவரை பாலிய தேவைக்காக விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இந்த நபரின் வங்கிக் கணக்கில் இருந்து  4 கோடியே 56 இலட்சத்து 81 ஆயிரத்து 905 ரூபா பணம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

பொலிஸ் தலைமையகம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

சந்தேகநபர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள், சிறுமியரை பாலியலுக்காக விற்பனைசெய்யும் நடவடிககைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவினால் இன்று  வெளியிடப்பட்ட அறிக்கையில்,

கொழும்பில் 15 வயது சிறுமி பாலியல் தேவைக்காக விற்பனைசெய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறுமியை பாலியலுக்காக விற்பனைசெய்தமை மற்றும் அதற்கு உதவியமை குறித்து சட்டவிரோதமாக சொத்துகள் தொடர்பான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.

அதனடிப்படையில் 36 வயதான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு சொந்த விலாசம்  மற்றும் நிரந்தர வதிவிடம் ஒன்றும் இல்லையென்றும் தெரியவந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 18 வருடங்களாக பெண்களையும் சிறுமியரையும் பாலியல் தேவைக்காக விற்பனைசெய்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் போன்ற செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

அத்துடன் கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு பெண்களையும் சிறுமியரையும் பாலியல் தொழிலுக்காக விற்பனைசெய்துவந்துள்ளார். அவ்வாறே குறித்த 15 வயது சிறுமியும் அவரது தாயாரும் விற்பனைசெய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் வாத்துவவில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை அன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.