Header Ads



இன ஐக்கியத்தை வலியுறுத்தி‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிளோட்டும் சுல்பிக்கார் (வீடியோ)


- பாறுக் ஷிஹான் - 

இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய  சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள பொத்துவில் பகுதியை   சேர்ந்த‌ சுல்பிகாருக்கு இன்று புதன்கிழமை(16) மாலை மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் வைத்து கௌரவம் வழங்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை(12) அன்று இலங்கை திருநாட்டின் 74வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை வ‌லியுறுத்தி நாடு முழுவ‌தும் த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிள் சவாரியை  இவர்  கொழும்பு சுத‌ந்திர‌ ச‌துக்க‌த்திலிருந்து ஆர‌ம்பித்திருந்தார்.

குறித்த ஆரம்ப  நிகழ்வில்   ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌த்துட‌ன்  சைக்கிள் சவாரி ஆரம்பமாகி  கொழும்பிலிருந்து யாழ்ப்பாண‌ம், கிளிநொச்சி, திருகோண‌ம‌லை, க‌ல்முனை,பொத்துவில், ஹ‌ம்பாந்தோட்டை ஊடாக‌ கொழும்பை சென்றடையவுள்ளது.

No comments

Powered by Blogger.