Header Ads



10,000 ரூபா கொடுக்கல் வாங்கல் கொலையில் முடிந்தது - சந்தேக நபர் காட்டுக்குள் பதுங்கியிருந்த போது கைது


- துவாரக்ஷான் -

தலவாக்கலை - மடக்கும்புர‌ வடக்கு மலைப் பிரிவில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் 30 வயதுடைய குடும்பஸ்தர்  ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நபர்களுக்கு இடையில் 10,000 ரூபா  கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இதற்கு காரணம் என விசாரணை மூலம் தெரியவந்து.

இந்த நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்  தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று மாலை வனப்பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்த நபரை இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.