எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்க்கும் வகையில் JVP எதிர்ப்புப் பேரணி
திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்க்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) எதிர்ப்புப் பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இப்பேரணியானது இன்றைய தினம் மருதானை தொழில்நுட்ப சந்தியில் ஆரம்பித்து கோட்டை வரை பயணித்துள்ளது.
இதன்போது, பேரணி புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது முட்டை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பேரணிக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேரணி காரணமாக கொழும்பு மருதானை - டெக்னிக்கல் சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
குறித்த பேரணியில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹருணி அமரசூரிய, கட்சியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளடங்கலாக பெருமளவான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாங்கும் கடன்களுக்காக தெற்கின் பகுதிகளை சீனாவுக்கு வழங்குவது போன்று, கிழக்கின் பகுதிகளை இந்தியாவுக்கு வழங்குவது மிகச் சரியானது
ReplyDelete