Header Ads



ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு


ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தரிக் அஹமட் அவர்கள் மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையுடன் தற்போது காணப்படும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் அவர்கள் மூன்று தினங்களுக்கு நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.

உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு நல்குதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி துறையின் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

 குறித்த சந்திப்பின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

2 comments:

  1. ஆளுக் கொரு பிச்சைப்பாத்திரத்தை தூக்கிக் கொண்டு அண்மையில் சென்றால் ஏதாவது ஒரு பாத்திரத்திலாவது பிச்சை விழும்.எங்கு போனாலும் பிச்சை பாத்திரம் நீட்டுவது முஸ்லிம் ஒருவரிடம்தான்.பிச்சை விழுவதும் முஸ்லிம் ஒருவரிடமிருந்துதான்.ஆனால் அந்தப்பிச்சையைக் களவாடிவிட்டு மீண்டும் பிச்சைப்பாத்திரத்தை நீட்டுவது ஒரு முஸ்லிம் ஒருவரிடம்தான். இந்த நாட்டுக்கு வருகை தரும் ஒருமனிதனையும் பிச்சை கேட்காமல் விடுவதில்லை. அந்தவகையில் உலகில் தனியான ஒருநாடு இலங்கை.

    ReplyDelete
  2. ஆளுக் கொரு பிச்சைப்பாத்திரத்தை தூக்கிக் கொண்டு அண்மையில் சென்றால் ஏதாவது ஒரு பாத்திரத்திலாவது பிச்சை விழும்.எங்கு போனாலும் பிச்சை பாத்திரம் நீட்டுவது முஸ்லிம் ஒருவரிடம்தான்.பிச்சை விழுவதும் முஸ்லிம் ஒருவரிடமிருந்துதான்.ஆனால் அந்தப்பிச்சையைக் களவாடிவிட்டு மீண்டும் பிச்சைப்பாத்திரத்தை நீட்டுவது ஒரு முஸ்லிம் ஒருவரிடம்தான். இந்த நாட்டுக்கு வருகை தரும் ஒருமனிதனையும் பிச்சை கேட்காமல் விடுவதில்லை. அந்தவகையில் உலகில் தனியான ஒருநாடு இலங்கை.

    ReplyDelete

Powered by Blogger.