வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் விடுவிக்கப்பட்டார்
கடந்த 2010 - 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 153 சதொச பணியாளர்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதவான் புத்திக சிறி ராகல உத்தரவிட்டார்.
Post a Comment