Header Ads



பேரனை கண்டுப்பிடித்து தாருங்கள்: பாட்டி உருக்கமான வேண்டுகோள்


- ஆர்.ஜெயஸ்ரீராம் -

தனது பேரனை கண்டுப் பிடித்து தருமாறு பாட்​டி ஒருவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சூர நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தர்மவதி வயது 72) பாட்டியே,   உணவு, உறக்கமின்றி அழுது புலம்புகிறார்.

மாணிக்கராசா மதுசாந் வயது (21) என்ற இளைஞன் வறுமை நிலமை காரணமாக கொழுமபபு வெள்ளவத்தைக்கு தனது உறவினர்களுடன் கூலி வேலைக்காக 09.01.2022 ஆம் திகதியன்று சென்றுள்ளார்.மன நலம் பாதிக்கப்பட்டவரான இவர் சிகிச்சை பெற்றுவந்ததினால் ஓரளவு நோய் குறைவடைந்து காணப்பட்டுள்ளது.

பொங்கல் தினத்திற்கு மறுநாளான 15.1.2022 ஆம் திகதியன்று வெளியில் சென்றவேளை காணமல் போயிருந்தார்.இவரை காணவில்லையென தேடியபோது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து 16.1.2022 ஆம் திகதி இரவு மீட்டுள்ளனர். பின்னர் அவரை இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல  முற்சக்கரவண்டியில் ஏற்றுவதற்கு முயற்சித்தபோது அவர்களை தள்ளிட்டு ஓடிச்சென்று  மறைந்துள்ளதாக அவரை கொழுப்பிற்கு அழைத்துச் சென்றவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.