Header Ads



37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய 2 கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன


37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் இருந்து மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அதனடிப்படையில் 8 நாட்களுக்கு போதுமான டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.