Header Ads



இலங்கைக்கான GSP பிளஸ் பறிபோகலாம் - ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

இலங்கை மனித உரிமைகள் தனது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால் ஜிஎஸ்டி பிளஸ் வரிச்சலுகை நிறுத்துவது குறித்து சிந்திக்கவேண்டி வரும் என ஐரோப்பிய  ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய  ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சில வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றது என தெரிவித்துள்ள இலங்கைக்;கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்கியு இந்த அர்ப்பணிப்புகளை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் என ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் மீள் வருகை நல்லிணக்கத்தை நோக்கிய முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஐரோப்பிய ஓன்றியம் கவலையடைந்துளளது எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.