Header Ads



கொழும்பு ஸாஹிராவில் அரபு மொழித்தின விழாவும், அல்லாமா இக்பால் நினைவுதின விழாவும்


கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் சர்வதேச அரபு மொழித்தின விழா

சர்வதேச அரபு மொழித் தினத்தை முன்னிட்டு கொழும்பு ஸாஹிராக் கல்லூரி விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளது. கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் எதிர்வரும் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு (04.11.18) அப்துல்கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு, பிரதம அதிதியாக ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி. கமருஸ்ஸமான் அவர்களும் சிறப்புப் பேச்சாளராக இஸ்லாமியக் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மொஹிதீன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ்விழாவில் சர்வதேச அரபு மொழித்தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் நடைபெறும்.

2

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் அல்லாமா இக்பால் நினைவுதின விழா

அல்லாமா இக்பால் நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு ஸாஹிராக் கல்லூரி விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளது. கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் எதிர்வரும் 09ம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 8.30 மணிக்கு (09.11.2018) அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு சிறப்பு பேச்சாளராக கதீஜதுல் குப்ரா இஸ்லாமிய உயர் கல்விக்கான மகளிர் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் நவாஸ்தீன் நளீமி ஆ.யு Pபுனுநு(ஆநசவை) அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள். 

No comments

Powered by Blogger.