Header Ads



பிரபல ஐரிஷ் பாடகி, இஸ்லாத்தைத் தழுவினார்


-M.I.Abdul Nazar-

ஐரிஷ் பாட­கியும் பாட­லா­சி­ரி­யை­யு­மான மெக்டா டாவிட் என அறி­யப்­பட்ட சினியெட் ஓகொன்னோர்  இஸ்­லாத்தை தழுவி தனது பெயரை ஷுஹாதா டாவிட் என மாற்­றிக்­கொண்­டுள்­ள­தா­கவும் கடந்த வாரம் தனது டுவிட்­டரில் அறி­வித்தார்.

''நான் முஸ்­லி­மாக மாறு­வதில் பெரு­மை­ய­டை­கின்றேன் என இத்தால் அறி­விக்­கின்றேன். எந்­த­வொரு புத்­தி­சா­லித்­த­ன­மான அறி­வா­ளி­யி­னது பய­ணத்­திலும் இயல்­பாக எடுக்­கப்­படும் முடிவு இவ்­வா­றா­ன­தா­கவே இருக்கும். இஸ்லாம் பிற கொள்­கைகள் அனைத்­தையும் மாற்­றி­ய­மைத்­துள்­ளது. எனக்கு புதிய பெய­ரையும் அளித்­துள்­ளது. நான் ஷுஹா­தா­வாக இருப்பேன்'' எனவும் அவர் தனது டுவிட்­டரில் தெரி­வித்­துள்ளார்.

முஸ்­லிம்கள் தொழு­கைக்­காக அழைக்­கப்­படும் அதானை கூறும் காணொ­ளி­யொன்­றி­னையும் அவர் வெளி­யிட்­டுள்ளார். இது எனது அதான் சொல்லும் முத­லா­வது முயற்சி. நான் உணர்ச்­சி­வ­சப்­பட்­டதால் சில உச்­ச­ரிப்புப் பிழைகள் ஏற்­பட்­டுள்­ளன என அதற்குத் தலைப்­பிட்­டுள்ளார்.

அதனை நான் முப்­பது தட­வைகள் பயிற்சி செய்­த­போது உல­கத்தை நோக்­கிய கவனம் நின்­று­வி­டு­கின்­றது எனவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

51 வயது கலை­ஞ­ரான இவர் பிரிந்து சென்­ற­தொரு கத்­தோ­லிக்க பிரிவின் போத­க­ராக பத­வி­யேற்க விருந்தார். மேலும் கடந்த வருடம் அமெ­ரிக்­காவில் தீவிர மன­நல சிகிக்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.

தனது நெருங்­கிய நண்­பி­யான எலைன் தனக்கு முத­லா­வது ஹிஜாப் ஆடை­யினை வழங்­கி­ய­தா­கவும் அதை தான் அணிந்­த­போது உடல் சிலிர்த்­த­தா­கவும் மற்­று­மொரு டுவிட்டர்  பதிவில் ஓகொன்னோர் தெரி­வித்­துள்ளார். அந்த புகைப்­ப­டத்தை தான் பிர­சு­ரிக்­கப்­போ­வ­தில்லை எனவும் அது தனிப்­பட்ட ஒன்று எனவும் ''நான் ஒரு அசிங்­க­மான கிழவி; ஆனால் மகிழ்ச்­சி­யான கிழவி'' எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

ஓகொன்னோர் முன்­னணி பாட­கி­யாக இருந்த அதே­வேளை, புற்று நோய் தொடர்­பான விழிப்­பு­ணர்வு தர்ம ஸ்தாபனத் திட்­டங்­க­ளுக்­கா­கவும் பாடல்­களைப் பாடி­யுள்ளார். அவர் தனது தனிப்­பட்ட பத்து பாடல் தொகுப்­புக்­க­ளுக்கு மேல­தி­க­மாக பல தனி­யான பாடல்­க­ளையும், திரைப்­ப­டங்­க­ளுக்­கான பாடல்­க­ளையும், ஏனைய கலை­ஞர்­க­ளுடன் இணைந்தும், தர்ம ஸ்தாபன நிதி சேக­ரிப்பு கலை நிகழ்­வு­க­ளிலும் அவர் பாடி­யுள்ளார்.

ஓகொன்னோர் இஸ்­லாத்தைத் தழு­வி­யுள்­ள­மை­யினை முஸ்லிம் அறி­ஞ­ரான யாசிர் காதி வர­வேற்­றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு சர்­வ­தேச மதிப்­பீ­டு­களின் பிர­காரம் உலகில் 1.8 பில்­லியன் முஸ்­லிம்கள் இருக்­கி­றார்கள். உலக மக்­களில் நான்கில் ஒருவர் முஸ்­லி­மாவார். அதன் அடிப்­ப­டையில் உலகின் இரண்­டா­வது பெரிய மத­மாக இஸ்லாம் காணப்­ப­டு­கின்­றது.

2016 ஆம் ஆண்டு பிவ் ஆய்வு மத்­திய நிலை­யத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் பிர­காரம் 2010 தொடக்கம் 2015 வரை­யான முஸ்­லிம்­களின் 0.3 வீத அதி­க­ரிப்பு மத மாற்­றத்­தினால் ஏற்­பட்­டுள்­ளது. அதே­வேளை 99.7 வீத­மான அதி­க­ரிப்பு இயற்­கை­யான முறையில் அதி­க­ரித்­துள்­ளது.

முஸ்லிம் அல்­லாத அமெ­ரிக்கா போன்ற நாட்டில் 25 வீத­மான அமெ­ரிக்க முஸ்­லிம்கள் மதம் மாறி­ய­வர்­க­ளாவர் எனவும், பிரித்­தா­னி­யாவில் சுமார் ஆறா­யிரம் பேர் வரு­டாந்தம் இஸ்­லாத்­திற்கு மதம் மாறு­வ­தா­கவும் நியூயோர்க் டைம்ஸ் மதிப்­பீடு செய்­துள்­ளது.

பிவ் ஆய்வு மத்­திய நிலை­யத்தின் ஆய்­வு­களின் பிர­காரம் இஸ்­லாத்­திற்­கான 77 வீதமான மத மாற்றங்கள் கிறிஸ்தவத்தில் இருந்து இடம்பெறுவதாகவும், 19 வீதமான மத மாற்றங்கள் நாத்திகத்திலிருந்து இடம்பெறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறமாக இஸ்லாத்திலிருந்து வெளியேறிய 55 வீதமானோர் நாத்திகத்திற்கு சென்றுள்ளதோடு 22 வீதமானோர் கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ளனர்.
-Vidivelli

3 comments:

  1. யாரோ ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் "பிரபல பாடகி" என்று போட்டு இருக்கின்றீர்கள். இலங்கையில், இந்தியாவில் இருக்கும் மக்களில் யாருக்காவது இவரைப் பற்றி இதுவரை தெரியுமா? இவர் பாடிய இரண்டு பாடல்களை "கூகுள்" பண்ணாமல் சொல்ல முடியுமா? இஸ்லாத்தை யாரோ ஒருவர் ஏற்றுவிட்டார் என்பதற்காக அவரை "பிரபல பாடகி" என்று சொல்வது என்ன நியாயம்?

    யாராவது இஸ்லாத்தை ஏற்றால் "பிரபல" என்று அடைமொழி கொடுக்கின்றீர்கள், அல்லது உண்மையிலேயே பிரபலமான மைக்கல் ஜாக்சன், நீல் ஆம்ஸ்ரோங், மிஸ்டர் பீன் போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று பொய் தகவல்களை பரப்புகின்றீர்கள்.

    இஸ்லாத்தில் இருந்து பலர் இப்பொழுது வெளியேறி வருகின்றார்கள். ஒரு காலத்தில் நடக்கவே முடியாது என்று இருந்த விடயம் இப்பொழுது நடக்க ஆரம்பித்து விட்டது.

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு மார்க்கம் தெரியாத மக்களாய் நாங்கள் இண்டைக்கி இருக்கிறோம், கண்டதை, கேட்டதை எல்லாமே இஸ்லாம் என்று நம்புகிறோம். ஆனால் இஸ்லாம் என்றது அல்லாஹ்வின் வழிகாட்டலும், தூதரின் வழிமுறையும், நேர்வழியில் இருந்த சஹாபாக்களின் விளக்கத்தின் மூலமும் பெறப்பட்டதே தவிர, நான்கு பேர் சேர்ந்துகொண்டு புதுசாக உருவாக்கிக்கொண்டு பெயர் வைப்பது அல்ல.

    அல்குர்ஆனில் உள்ள 109 வது அத்தியாயம் சூரத்துல் காஃபிரூன், 6 வசனங்களுடன் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் அற்புத வார்த்தைகள். இந்த அத்தியாயத்தில் வரும் 6 வது அரபு வசனமே லகும் தீனுக்கும் வலியதீன் (لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ), இதன் அர்த்தம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”


    முதலில் இந்த இறைவசனம் எங்கு? எப்போது? எந்த சூழலில் இறங்கியது இந்த வசனத்தின் பின்னணி என்ன? என்பதை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு அல்குர்ஆன் வசனத்தையும் நாம் எங்கு? எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தவறாக இறைவசனங்களை சம்பந்தமில்லாத சூழலில் பயன்படுத்தி அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்பதில் நாம் அனைவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    “முஹம்மதே நீர் ஒராண்டு எங்கள் தெய்வங்களான லாத்து உஸ்ஸாவை வணங்கும், அது போன்று நாங்களும் அடுத்த வருடம் நீர் அந்த ஓரிறை கொள்கையை நாங்கள் வணங்குகிறோம் என்ன சம்மதமா?” என்ற வடிகட்டிய இணை வைப்பு சமாதானத் திட்டத்தை எடுத்து வைத்தனர். குரைஷி தலைவர்கள் முஹம்மது ஸல் அவர்களை தங்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைக்க முயற்சித்த இந்த வேளையில் தான் சூரத்துல் காஃபிரூன் முழு அத்தியாயமும் மற்றும் சூரத்துல் ஜுமர் அத்தியாயத்தின் 64-வது வசனம் என்ற இறைவசனம் இறங்கியது.
    ஆக இஸ்லாம் மார்க்கத்தில் கலப்படம் செல்ல முடியாது. அவரை, இவரை சந்தோசப் படுத்துவதற்காக அடுத்த மதங்களில் உள்ள விடயங்களை இஸ்லாத்திற்குள் கொண்டுவர முடியாது.

    ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால் அவருக்குத்தான் நன்மையே தவிர, இஸ்லாத்திற்கு இல்லை.

    இந்த பெண்மணி யார் என்று தேடித் பார்த்தால் இவரது வாழ்க்கை குழப்பங்கள் கொண்டது என்று புரிய கூடியதாக இருக்கிறது. போதை பழக்கம், தலையை மொட்டை அடிப்பது, பலவிதமான ஆபத்தான மனநோய் பாதிப்பு என்று நிறைய சிக்கல்கள் உள்ள ஒருவர் இவர்.

    இவர் இஸ்லாத்தை ஏற்றதாக சொல்கின்ற அமைப்பு மிகவுமே வழிகேடான ஆபத்தான அமைப்பு ஆகும். இவரை இஸ்லாத்தை ஏற்க வைத்தவர்களுக்கு முதலில் இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமான கடமை சமூகத்திற்கு இருக்கிறது. இவர் இஸ்லாத்தை ஏற்று இவரை அதான் (பாங்கு) சொல்ல அவர்கள் அனுமதிக்கின்றார்கள், அது முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணான முறையில் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை யாருக்கும் மாற்ற அதிகாரம் இல்லை.

    இப்படியே போனால் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளுகின்ற நிறைய மக்கள் பெயருக்கு இருப்பார்கள், அவர்களுக்கும் அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து இறக்கிய இஸ்லாத்திற்கும் சம்மந்தமே இருக்காது. அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Hari Thivahar: Just have some readings about Islam.

    ReplyDelete

Powered by Blogger.