Header Ads



சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல் - அதிரடிப் படை குவிப்பு

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமையப் பெற்றுள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைய இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம்.லதீப் குறிப்பிட்டுள்ளார். 

தேசிய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமரின் ஊழியர்கள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி நல்ல முடிவை எடுத்துள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.