Header Ads



தன்னைக் கொல்ல றோ, சதி செய்தது என மைத்திரிபால கூறினார் - அம்பலப்படுத்தினார் ரணில்

இந்திய றோ உளவுப் பிரிவினர் கொலைச் சதியுடன் தொடர்புபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டத்தின் பின்னணியில் றோ உளவுப் பிரிவிற்கு தொடர்பு உண்டு என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நானே இந்த நாட்டின் பிரதமர் எனவும் அரசியல் அமைப்பு மீது நம்பிக்கை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் தொடர்பிலான விசாரணைகளில் தாம் எவ்வித தலையீடும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் என ஊகிப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்தியாவின் கையாலாகாத்தனம்

    ReplyDelete

Powered by Blogger.