Header Ads



கோபித்துக் கொண்ட, பௌசி சமாதானமானார் - இராஜாங்க அமைச்சும் கிடைக்கிறது.

மைத்திரிபால சிறிசேனவுடன் அதிருப்தி கொண்டு, சுதந்திரக் கட்சியின் கூட்டங்களில் பங்குகொள்ளாமல் மூத்த அரசியல்வாதி பௌசி மௌனம் காத்து வந்தார்.

இந்நிலையில் இன்று -02- மைத்திரிபால சிறிசேன சார்பில், அமைச்சர்களான மகிந்த அமரவீர மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோர் பௌசியின் வீட்டுக்கு சென்று சமரசப் பேச்சில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சமாதானமான பௌசி, தற்போது மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளார். 

அவருக்கு மேலதிகமாக முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து jaffna muslim  இணையத்திற்கு அறியவருகிறது.

1 comment:

  1. கூடலுக்கு முன் ஊடல் என்பது இதுதானோ?

    ReplyDelete

Powered by Blogger.