Header Ads



அலரி மாளிகைக்கு முன்னால்சென்ற, அஜித் பிரசன்னா அடிவாங்கினார்


பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னால் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று -01- மாலை அலரி மாளிகைக்கு முன்னால் வைத்து ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிற்பகல் வேளையில் பிரசன்ன மற்றும் மேலும் சிலர் அந்தப் பகுதியால் சென்ற போது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்குள் உள்ள சிலரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஜித் பிரசன்ன குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரபெரும, ஹேஷான் வித்தாரண உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன், தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளதாக பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் காரணமாக பிரசன்னவின் தலை, கண் உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலின் பின்னர் குறித்த இடத்தை விட்டு தப்பிச் சென்றவர் அஜித் பிரசன்ன கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.